டெல்லி திமார்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்கேஷ் மீனா (32) எனும் நபர் தன் வீட்டில் தீக்காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் இது விபத்து என போலீசார் கருதினர். ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
ராம்கேஷ் மீனா ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். அவர் வசித்த வீட்டில் இருந்து சில மின்னணு சாதனங்கள் மீட்கப்பட்டன. அவருடைய ஹார்ட் டிஸ்கில் 15 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இருந்துள்ளது. மேலும் ஒரு பெண் வந்து சென்றதற்கான தடயம் சிக்கியது. இதையடுத்து இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில், அவருடன் அம்ரிதா என்ற பெண் லிவிங் பார்ட்னராக வசித்து வந்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் தனிப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாகவும், அதனால் தகராறு நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. அம்ரிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரை கொலை செய்ததும், பின்னர் தீ வைத்து விபத்து போல் காட்ட முயன்றதாக ஒப்புக்கொண்டார்.
தகவலின்படி, காதலரின் போனில் நிர்வாண படங்களும் சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களும் இருந்ததால் அம்ரிதா அவர்களுடைய படங்களை அழிக்க வலியுறுத்தியும் அவர் அழிக்காததால் அவரை கொன்றதாக கூறியுள்ளார். இந்த வழக்கில் அம்ரிதா மற்றும் அவளது இரு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லிவிங்க் பார்ட்னரை கொலை செய்து, அதனை விபத்து போல் காட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



