Marriage | அமீர் – பாவனி திருமணம் எப்போது..? தேதி அறிவிச்சாச்சு..!! கல்யாண சாப்பாடு ரெடி..!!

சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வரும் அமீர்- பாவனியின் திருமணம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த வந்த நிலையில், தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட்க்காக காதலிக்கும் நிறைய ஜோடிகளை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் பலர் தொடர்பில் இல்லாமல் போவதும் அல்லது நட்பு தொடர்வதும் உண்டு. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பழகி அதைக் காதலாக்கி திருமணத்திற்கு எடுத்து செல்ல இருக்கிறது அமீர்- பாவனி ஜோடி.

’ரெட்டைவால் குருவி’, ‘சின்னத்தம்பி’ ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பாவனி. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதீப் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், பிரதீப் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், சோகத்தில் ஆழ்ந்தார் பாவனி. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்தவர் தனது கரியரில் கனவம் செலுத்தத் தொடங்கினார். அப்படித்தான் அவருக்கு பிக்பாஸ் சீசன் 5 வாய்ப்பு கிடைத்தது. அங்கு காதலும் கைகூடியது.

இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் கோரியோகிராஃபர் அமீர். இவர் தான் பாவனியிடம் தனது அன்பை முதலில் வெளிப்படுத்தினார். ஆனால், நிகழ்ச்சி முடியும் வரையும் அதை ஏற்க முடியாமல் குழப்பத்தில் தத்தளித்தார் பாவனி. பிக்பாஸ் முடிந்ததும் பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இவர்கள் வெற்றி பெற்றனர். இந்த சமயத்தில் அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார் பாவனி. இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் திருமணம் எப்போது எனக் கேட்டு வந்தவர்களுக்கு இந்த வருடம் நவம்பர் மாதம் என்ற ஸ்வீட் செய்தியை சொல்லி இருக்கிறது ஜோடி. ’சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்கப்பா’ என மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

Read More : Aadhaar | மக்களே..!! ஆதாரில் இந்த விஷயத்தை பண்ணிட்டீங்களா..? வெளியான முக்கிய தகவல்..!!

Chella

Next Post

OTT | ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்கள் முடக்கம்..!! ஆப்பு வைத்த மத்திய அரசு..!!

Thu Mar 14 , 2024
ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் உலகத்தில் தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள், தொடர்ந்து அவதூறு மற்றும் ஆபாசமான செயல்களை கையில் எடுத்து சமூகத்தை சீரழித்து வருகின்றனர். ஆபாச காட்சிகளை ஒரு சில ஓடிடி தளங்கள், சமூக வலைதள பக்கங்களில் ஒளிபரப்பி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் […]

You May Like