மீண்டும் ரஷ்யாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதியில் மக்கள்!

tsunamis fury engulfs city 1

ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இன்று 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜூலை மாதம் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை சந்தித்த அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.


எந்தவொரு சுனாமி அச்சுறுத்தலுக்கும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கிழக்கு ரஷ்யா முழுவதும் கடுமையான நிலநடுக்கங்களை ஏற்படுத்தியது.. ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல பசிபிக் தீவு நாடுகளும் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தன..

அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின்படி, இந்த நிலநடுக்கம் கடந்த 14 ஆண்டுகளில் உலகின் மிக வலிமையானதாகவும், இதுவரை பதிவு செய்யப்பட்ட 6-வது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2011 இல் ஜப்பானை பேரழிவிற்கு உட்படுத்திய 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு இது மிகவும் கடுமையான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.. மேலும் இந்த நிலநடுக்கம், அழிவுகரமான சுனாமி மற்றும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.

கம்சட்கா தீபகற்பம் நில அதிர்வு நடவடிக்கைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது. 1952 ஆம் ஆண்டு, சோவியத் காலத்தில், இந்தப் பகுதி 9.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.

ஜூலை மாத நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் ஹவாய், அலாஸ்கா, கலிபோர்னியா மற்றும் மேற்கு கடற்கரையில் உள்ள பிற மாநிலங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர்..

ஹவாய் மற்றும் அலாஸ்கா நேரடி சுனாமி எச்சரிக்கையின் கீழ் இருந்தன, அவசர நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதிப்பு எதிர்பார்க்கப்பட்டது. பசிபிக் முழுவதும் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்படக்கூடிய மண்டலங்களில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தற்காலிக நிறுத்தம்!. “ஐரோப்பிய நாடுகளே காரணம்”!. புதின் குற்றச்சாட்டு!

RUPA

Next Post

Gen Z போராட்டம்! ஒரே இரவில் திவாலான நேபாளத்தின் ஹோட்டல் துறை..! சேதத்தின் மதிப்பு இத்தனை பில்லியனா?

Sat Sep 13 , 2025
சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தின் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் நேபாளத்தின் ஹோட்டல் துறை பேரிழப்பை சந்தித்துள்ளது.. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் சமீபத்தில் மாணவர்கள் தலைமையிலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது சூறையாடப்பட்டு அல்லது தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.. இதனால் நேபாளத்தின் ஹோட்டல் துறை, ரூ.25 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாக வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள ஹில்டன் ஹோட்டல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.. […]
nepal hotels

You May Like