ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் அணி மாஸ் வெற்றி..!! சஷாங்க் சிங்கிற்கு குவியும் வாழ்த்து..!!

ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால், அவர்கள் எடுக்க நினைத்தது, 19 வயதான சஷாங்க் சிங். ஆனாலும், பஞ்சாப் அணி அவருக்கு வாய்ப்பளித்தது.

15 ஐபிஎல் போட்டிகளில் 9 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்றையப் போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கினை விரட்டும்போது, சீனியர் வீரர்கள் ஆட்டமிழக்க குறைவான ஆட்டம் ஆடிய சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஷாங்க் சிங்குக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன்னம்பிக்கை நிரம்பியுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Read More : Lok Sabha | தேர்தலில் வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை..? வாக்காளர்களே மறந்துறாதீங்க..!!

Chella

Next Post

டிடி நேஷனல் சேனலில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்... தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம்!

Fri Apr 5 , 2024
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான திரைப்படம், ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு வெளியான […]

You May Like