தற்போது விளையாட்டு வீரர்கள், நாடகக் கலைஞர்கள், நடன கலைஞர்கள் பலரும் மேடையிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. வட மாநிலங்களில் இந்த நிகழ்ச்சியானது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் சியோனி மாவட்டத்தில் உள்ள பக்காரி எனும் கிராமத்தில் திருமண வைபவம் ஒன்றில் நான்கு பெண்கள் சேர்ந்து நடனமாடி இருக்கின்றனர். இந்த நான்கு பெண்களில் ஒரு பெண் நடனமாடும் போது திடீரென்று மேடையில் சரிந்து விழுந்தார்.
உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெரும் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்மணி மேடையில் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.