தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா.இவர் வித்யாசாகர் என்ற நபரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் மீனாவின் கணவர் நுரையீரல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இப்படியான சூழ்நிலையில் அண்மையில் அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது எனக்கு ரித்திக் ரோஷனை மிகவும் பிடிக்கும். என்னுடைய திருமணத்திற்கு முன்னதாக என்னுடைய தாயிடம் எனக்கு ரித்திக் ரோஷன் போன்ற மாப்பிள்ளையை பாருங்க என்று தெரிவித்து இருக்கிறேன். நான் ரித்திக் ரோஷனின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய நடிப்பு, நடனம் அனைத்துமே நன்றாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் கணவரின் மறைவுக்குப் பின்னர் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இருந்தாலும் அதில் உண்மை தன்மை இல்லை என்று மீனாவின் தரப்பு ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.