#ஈரோடு: மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி கிணற்றில் குதித்த பகீர் சம்பவம்..!

ஈரோடு மாவட்டம் வாணிகவுண்டன் பாளையத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 


இந்த நிலையில் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சரஸ்வதி திடீரென வீட்டின் முன்புறம் உள்ள 80 அடி ஆழ்துளை கிணற்றில் குதித்துள்ளார். சரஸ்வதி தண்ணீர் இல்லாமல் 1 அடி ஆழமுள்ள சேற்று கிணற்றில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். 

நேற்று காலை, அந்த வழியாக சென்ற பச்சையப்பன், கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டது. தண்ணீரில் மிதந்த சரஸ்வதியை பார்த்து பச்சையப்பன் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை தொடர்ந்து அவர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி சரஸ்வதியை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர். 

இதனையடுத்து மீட்கும் முயற்சியில் சரஸ்வதியின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் சரஸ்வதியை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

தனது ஆண் நண்பரின் வீடியோவை மார்ஃப்பிங் செய்து மிரட்டிய இளம்பெண்.. விபரீத முடிவு எடுத்த இளைஞர்..!

Wed Dec 28 , 2022
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவை சேர்ந்தவர் முரளி (19). தொழிலாளி அவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தனது தொலைபேசியில் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறார். சில நாட்களுக்கு முன், முகநூலில் பார்த்தபோது, ​​ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்துடன், ப்ரியாசர்மா என்ற ஐடியில், “நண்பர் கோரிக்கை” வந்தது.  இதனால் மகிழ்ச்சியடைந்த முரளி, பிரெண்டின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதை ஏற்றுக் கொள்வதாக அந்த இளம் பெண்ணும் அவருக்கு செய்தி அனுப்பியுள்ளார். […]
Screenshot 2022 12 28 10 45 06 20 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like