ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், அதன் இணைப்புப் பாலம் சரிந்து விழுந்ததால் இடிந்தன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றி வருகிறது. மேலும் இடிபாடுகளுக்கான காரணத்தை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்படும்.
சம்பவத்தின் போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததை நாங்கள் வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். மேலும் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒருவர் அமர்ந்திருந்தாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: நெல் கொள்முதல் விலை உயர்வு.. விவசாயிகளுக்கு குட்நியூஸ் சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்..