ஆசிரியரின் தலையை துண்டாக்கி தொங்கவிட்ட கொடூரம்.! அதிர்ச்சியில் உறையவைக்கும் பயங்கரம்.!

ஆசிரியரின் தலையை துண்டித்து பள்ளியின் கேட்டில் தொங்க விடப்பட்ட ஒரு பயங்கரம் மியான்மர் நாட்டில் நடந்து இருக்கின்றது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியில் நடக்கும் கொடூரங்களை வெளிப்படுத்துகிறது என இந்த படுகொலை பலராலும் பேசப்பட்டு வருகிறது.


மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது கடுமையான அடக்குமுறை தாக்குதல் மற்றும் நடவடிக்கைகள் ராணுவ ஆட்சியின் போது மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை பொதுமக்கள் மீது ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலில் கணக்கின்றி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் உள்ளார்கள்.

மியான்மர் நாட்டில் மிக்வே மாகாணம் தவுங் மையிட் கிராமத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சா டுன் மொய்(46), ராணுவ ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.இச்செயலால் நேற்று ராணுவத்தினர் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவரை கடந்த ஒரு ஆண்டாக மூடப்பட்டிருக்கும் பள்ளிக்கூடம் பகுதிக்கு கொண்டு சென்று பொதுமக்கள் முன்னிலையில் ஆசிரியரின் தலையை துண்டித்துள்ளனர். அதனை தொடர்ந்து, அந்த தலையை பள்ளியின் கேட்டில் தொங்கவிட்டு சென்றுள்ளனர்.

1newsnationuser5

Next Post

தன்னை தானே கடத்திக் கொண்ட கணவன்.. போலீஸிடம் கூறிய ருசிகர காரணம்.!

Sat Oct 22 , 2022
தன் இரு மனைவிகளிடம் இருந்து அனுதாபம் பெற செய்த காரியம் ஒன்று தனக்கே வினையான சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் கெய்க்வாட் என்பவர் மும்பையில் கல்யாண் நகரைச் சேர்ந்தவர். தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தானே தன்னை கடத்திய சம்பவம் மற்றும் அவரே சிக்கிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் தனது மனைவிகள் தன்னை நன்றாக கவனிக்கவில்லை என்பதால் இதனைச் செய்ததாகக் […]
’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

You May Like