Andhra: அதிசயம்!… மரத்தை வெட்டியதும் ஓடை போல கொட்டிய தண்ணீர்!… வைரலாகும் வீடியோ!

Andhra: ஆந்திரா வனப்பகுதியில் வனத்துறையினர் மரத்தை வெட்டிப்போது அதிலிருந்து தண்ணீர் கொட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலம், கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் பகுதியிலுள்ள சிந்து என்ற இடத்தில் ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரனும் வனத்துறையினரும் மார்ச் 30ஆம் தேதி (சனிக்கிழமை) காவல்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறுப்பு நிறத்தில் இருந்த ஒரு மரத்தில் பெரிய குமிழி போல் இருந்ததை வன அலுவலர் நரேந்திரன் கண்டார். அவர் தனது ஊழியர்களிடம் அந்த இடத்தில் வெட்டமாறு கூறினார்.

ஊழியர் அதை வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. அந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது. இந்த மரம் குறித்து கோண்டா ரெட்டி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்குக் கூறினர். மரம் தனது தேவைக்கு ஏற்ப கோடை காலத்துக்காக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளும் என்றும் முதலைத் தோலை போல் மரத்தின் பட்டை உள்ளதால் இதற்கு முதலை மர பட்டை எனவும், அறிவியல் பெயர் டெர்மி னாலியா டோமென்டோசா எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தண்ணீரை சுவைத்துப் பார்த்து இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது அல்ல என திரு நரேந்திரன் கூறினார். இந்த மரத்தின் தடித்த, உறுதியான மரத்துக்காக இது வெட்டப்பட்டு வருவதால் இம்மரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இம்மரம் இருக்கும் வனப்பகுதிகளை இந்திய வனத்துறையினர் வெளியிடுவதில்லை.

Readmore: Tollgate: தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் அமல்!… அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

Kokila

Next Post

கச்சத்தீவில் திமுகவின் பங்கு...! இன்று அண்ணாமலை வெளியிட போகும் RTI ஆதாரம்...!

Mon Apr 1 , 2024
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு உள்ள தொடர்பை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற விபரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட உள்ளார் ‌. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.கடந்த […]

You May Like