விஜய் டிவியிலிருந்து விலகி ஜீ தமிழில் இணைந்த மிர்ச்சி செந்தில்..!! சீரியல் குறித்து புதிய அறிவிப்பு..!!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் அதன் இரண்டாம் சீசன் என தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தவர் மிர்ச்சி செந்தில். நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடர் முடிந்தபிறகு அவர் எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவரது அடுத்த தொடர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் ஒரு புது சீரியலில் கமிட் ஆகி உள்ளாராம். அவருக்கு ஜோடியாக நித்யா ராமா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

செந்தில் தங்கையாக பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரித்திகா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ‘அண்ணா’ என இந்த தொடருக்கு பெயரிடப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால், அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி தான் கதை இருக்கும் என தெரிகிறது.

Chella

Next Post

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை…..! கோவை அருகே பயங்கரம்…..!

Wed Mar 29 , 2023
கோயமுத்தூர் மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காரைபாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி(54) இவருடைய மனைவி தங்கமணி அதே பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் மாலை சுப்பிரமணி சொந்த வேலையின் காரணமாக, வெளியே சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் சமையலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், தங்கமணி உயிரிழந்து கிடந்துள்ளார். மனைவி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி […]
’நான் ஹாஸ்டல் போக மாட்டேன்’..!! ஆத்திரத்தில் தாயின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்ற சிறுவன்..!!

You May Like