நாளை பசும்பொன்னுக்கு செல்வாரா முதல்வர்.? அரசு வெளியிட்ட அறிவிப்பு.!

நேற்று இரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு வலியால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் முதுகுவலிக்கான வழக்கமான பரிசோதனையை தான் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார் என்று கூறப்பட்டது.


அவர் மருத்துவமனைக்கு வந்த காரணத்தால் அதிகப்படியான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்திற்கு செல்ல இருந்தார்.

அவரது உடல்நிலை பாதிப்பு காரணமாக அவர் குருபூஜைக்கு செல்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இத்தகைய சூழலில், அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஸ்டாலின் நாளை பசும்பொன் கிராமத்தில் நடக்கும் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் மற்றும் இ.பெரிய சாமி உள்ளிட்டவர் கலந்து கொண்டு குருபூஜை விழாவில் மரியாதை செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்.. கொட்டி தீர்க்க காத்திருக்கும் மிக கனமழை.!

Sat Oct 29 , 2022
தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் உள்ளிட்ட மூன்று மாதங்களும் வடகிழக்கு பருவமழையானது பெய்யும். இருப்பினும், சமீபத்தில் வங்க கடலில் உருவாகிய இருக்கும் சித்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தில் துவங்குவதற்கான நேரத்தில் துவங்கவில்லை. தாமதமாக தான் வடகிழக்கு பருவமழை துவங்குகிறது. இது குறித்து சமீபத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. அக்டோபர் 29 ஆன இன்று துவங்கும் இந்த பருவ மழை அடுத்த […]
rain school

You May Like