8 ஆம் வகுப்பு மாணவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த சக மாணவியின் தாய்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

karaikudi crime 1

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் பால மணிகண்டன். அருகில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த பள்ளி ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு சென்ற சிறுவன் தனது தாயிடம் குளிர்பானத்தை குடித்ததில் இருந்து மயக்கமாக இருப்பதாக கூறியுள்ளான். திடீரென மயக்கம் போட்டு விழுந்த மாணவனை அவரது தாய் மருத்துவமனையில் அனுமதித்தார்.


இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார். மாணவன் அருந்திய குளிர் பானத்தில் விஷம் கலந்தது தெரிய வந்தது. மாணவனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது யார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை கையில் எடுத்தனர். மாணவனின் தாய் எனக் கூறி பள்ளியின் காவலாளி குளிர்பானத்தை கொடுத்தது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய் குளிர்பானத்தை தான் யாரிடமும் கொடுத்து அனுப்பவில்லை என்றார். பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பால மணிகண்டன் வகுப்பில் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா தன்னை பால மணிகண்டனின் தாய் எனக்கூறி காவலாளிடம் குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சகாய ராணியை பிடித்து விசாரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது தனது மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படித்ததால் கோபத்தில் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கினை விசாரித்த காரைக்கால் நீதிமன்றம் சகாயராணிக்கு ஆயுள் தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.

Read more: Flash : ஷாக்..! இன்று மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

English Summary

Mother of a fellow student who mixed poison in the juice of an 8th grade student.. Court gives dramatic verdict..!!

Next Post

தீபாவளியின் போது 300 பேருக்கு கண் காயம், 10 குழந்தைகளுக்கு பார்வை இழப்பு..! கார்பைடு துப்பாக்கிகளுக்கு தடை விதித்த அரசு..!

Fri Oct 24 , 2025
மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளி கொண்டாட்டங்களின் போது 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்களில் பலத்த காயம் அடைந்ததாகவும், 10 பேர் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து கால்சியம் கார்பைடு துப்பாக்கிகளை விற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு மத்திய பிரதேச அரசு முழுமையான தடை விதித்துள்ளது. பட்டாசுகளின் சத்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கால்சியம் கார்பைடு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி வெடிக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்தியதால் பல […]
GUN ACCIDENT

You May Like