விபரீதத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்…..! மருத்துவமனையில் இளைஞர்…..!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் இருக்கின்ற மார்பல்லி என்ற கிராமத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.போலி பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் போது ஒருவர் மீது, ஒருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக கலர் பொடி தூவுவது வழக்கம்.


அந்த வகையில், அம்பா தாஸ் என்ற இளைஞர் ஹோலி பண்டிகையின்போது சபீர் என்ற நபர் மீது கலர் பொடியை தூவி இருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அம்பாதாஸ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார்.

மேலும் சபீர் பெட்ரோல் கேனை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்றதாகவும், மேலும் அவர் தீப்பெட்டியையும் கையில் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சபீர் அம்பாதாஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததை கவனித்த அந்த பகுதியில் இருந்த கிராம மக்கள் அமாவாசை உடனடியாக மீட்டு நாராயண்கேட் அரசு மருத்துவமனைக்கும் அதன் பிறகு சங்கரெட்டி அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். தற்சமயம் ஹைதராபாத்தில் இருக்கின்ற உஸ்மானியா மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சபீரை காவல்துறையினர் கைது கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர் அவர் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Next Post

அடினோவைரஸ் இறப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் அரசு.. குழந்தைகளுக்கு படுக்கைகள் இல்லை.. முன்னணி மருத்துவர் பகீர் தகவல்..

Thu Mar 9 , 2023
அடினோவை வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மேற்கு வங்க அரசு குறைத்து காட்டுகிறது என்று முன்னணி மருத்துவர் குற்றம்சாட்டி உள்ளார்.. மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். […]
adeno children

You May Like