ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் திடீரென சிறையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்புஏற்பட்டது.
திருச்சியில் அகதிகள் முகாமில் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரிய முடிவு எடுக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு 2 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு மற்ற 7 பேருக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நளினி காட்பாடியில் உள்ள வீட்டுக்கு சென்றநிலையில் அவரது கணவர் காட்பாடியில் அவர் மனைவியுடன் தங்க அனுமதிக்கப்படவில்லை. அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் திருச்சி அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு 4 பேரையும் தனி அறையில்அடைத்து வைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 4 பேரும் சிறை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பாது தங்களை தனி அறையில் அடைத்து வைக்க கூடாது சக வெளிநாட்டு அகதிகளை நடத்துவது போல நடத்த வேண்டும் என கூறி முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி உத்தரவிட்டார்.