தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் அஜித். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும், இவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் காதல் மன்னன். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்து வருகிறது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மானு. இவர் அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டர். பள்ளி படிக்கும் காலத்திலேயே காதல் மன்னன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும், தன்னை கட்டாயப்படுத்தி தான் இயக்குனர் சரண் நடிக்க வைத்தார் என்றும் மானு தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், “விவேக் மற்றும் சரண் இருவரும் கட்டாயப்படுத்தி தான் நடிக்க வைத்தனர். படிப்பு முக்கியம் என எனக்கு தோன்றியதால் அதில் மட்டும் அதன் பிறகு கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன். எனது குடும்பம் சினிமா பின்னணி கொண்டதில்லை. எல்லோரும் டாக்டர்கள் தான். என் தாத்தா அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் Gopinath Bordoloi. நான் படிக்க தான் சென்னைக்கு வந்தேன். பள்ளி படிக்கும்போதே கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்தனர். அந்த படத்திற்கு பிறகு முழுவதும் படிப்பில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் தற்போது டாக்டராக தான் இருக்கிறார்” என மானு தெரிவித்துள்ளார்.