என் மீது எந்த சொத்தும் இல்லை அதனால் எந்த கவலையும் இல்லை…..! சட்டப்படி அனைத்தையும் சந்திப்போம் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு……!

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கின்ற அதிமுக கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைந்து இருப்பது மாயமானும்,மண் குதிரையும் ஒன்று சேர்ந்து இருப்பதை போல உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.


அரசியல் ரீதியாக என்னை எதுவும் செய்ய இயலவில்லை என்பதற்காக மிலானி என்ற திமுக கட்சியைச் சேர்ந்தவர் மூலமாக என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதனை சட்டப்படி சந்திப்போம் வருவாய் குறைவாக காட்டியுள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

ஆனால் அப்படி அல்ல, என்ன இருக்கிறதோ அதைத்தான் நான் காட்டி இருக்கிறேன். நான் எந்த ஒரு தொழிலையும் செய்யவில்லை, விவசாயம் மட்டும் தான் செய்து வருகிறேன். அதோடு எந்த சொத்தையும் மறைக்கவில்லை. அதிலும் குறிப்பாக என் மீது எந்த சொத்தும் கிடையாது. நான் இதுவரையில் என் பெயரில் எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

Next Post

தமிழகம் முழுவதும்……! அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை…..!

Fri May 12 , 2023
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு சென்ற மாதம் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறைகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய நிலையில் தான் இந்த விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவையும் மீறி வகுப்புகள் நடைபெறுவது […]

You May Like