நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் அரவிந்தன் என்ற இளைஞர் சிறு வயது முதலே ஓவியங்கள், சிற்பங்கள், உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் 4,000 மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.
பென்சில் முனை, சோப்பு, சாக்பீஸ் உள்ளிட்டவற்றில் கார்விங் முறையில் அரவிந்த் பல உருவங்கள் எழுத்துக்களை செதுக்கி கலைத்திறனை காட்டி வருகிறார். இவரது சாதனை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது பென்சில் முனையில் 1330 குறட்பாக்களையும் செதுக்கி சாதனை செய்துள்ளார்.

அவர் செதுக்கியுள்ள இந்த எழுத்துக்களை சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாது. லென்ஸ் வைத்து மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே, இது போல சாக்பீஸில் ஆ என்ற எழுத்துக்களை 1330 எண்ணிக்கையில் திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி இருக்கிறார்.
ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் செலவிட்டு ஏழு நாட்களில் இதை அவர் செய்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவருக்கு சோழன் புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கி இருக்கிறது. தொடர்ந்து, அரவிந்தனின் கலை பயணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.