பென்சில் கூர் முனையில் 1330 குறட்பாக்களை செதுக்கிய இளைஞர்.! குவியும் பாராட்டுக்கள்.!

நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் அரவிந்தன் என்ற இளைஞர் சிறு வயது முதலே ஓவியங்கள், சிற்பங்கள், உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் 4,000 மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.


பென்சில் முனை, சோப்பு, சாக்பீஸ் உள்ளிட்டவற்றில் கார்விங் முறையில் அரவிந்த் பல உருவங்கள் எழுத்துக்களை செதுக்கி கலைத்திறனை காட்டி வருகிறார். இவரது சாதனை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது பென்சில் முனையில் 1330 குறட்பாக்களையும் செதுக்கி சாதனை செய்துள்ளார்.

thiruvals

அவர் செதுக்கியுள்ள இந்த எழுத்துக்களை சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாது. லென்ஸ் வைத்து மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே, இது போல சாக்பீஸில் ஆ என்ற எழுத்துக்களை 1330 எண்ணிக்கையில் திருவள்ளுவரின் உருவத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் செலவிட்டு ஏழு நாட்களில் இதை அவர் செய்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவருக்கு சோழன் புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கி இருக்கிறது. தொடர்ந்து, அரவிந்தனின் கலை பயணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

தீபாவளி நெருங்கும் வேளையில் ரயில்வே கொடுத்த அதிர்ச்சி !!!

Mon Oct 17 , 2022
தீபாவளி நெருங்கும் நேரத்தில் ரயில்வே துறை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றிய அதிர்ச்சியான தகலை வெளியிட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம்  ஏற்கனவே நடைமேடை டிக்கெட்டை உயர்த்தியது. இந்நிலையில் பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியன் ரயில்வே , பண்டிகைக்காலத்தில் கூட திட்டமிட்டு விலை உயர்த்தியுள்ளது நடுத்தர மக்களை கலங்கச் செய்துள்ளது. ஏற்கனவே பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயில் […]
பெங்களூரு ரயில்

You May Like