fbpx

மென்பொருள் நிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு!!

உலக அளவில் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவிலும் ஆட்குறைப்பு தொடர்கின்றது.

டுவிட்டர், ஃபேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. பைஜூஸ், அன் அகாடமி, வேதாந்து, அப்கிராட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

உள்நாட்டில் மார்கன், ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற பன்னாட்டு நிறவனங்களும் ஆயிரக்கணக்கானோரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. அமெரிக்காவில் டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக் மெட்டா நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 11,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஒட்டு மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பர சந்தையில் வருவாய் குறைந்ததை அடுத்து மெட்டா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டதால் தன் செலவினங்களைக் குறைக்க ஆட்குறைப்பு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளிலும் ஏராளமான இந்தியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதனால் இந்தியர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Post

சிறுநீரகம் தானம் செய்யும் லாலுபிரசாத் மகள்!

Thu Nov 10 , 2022
ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருக்கும் நிலையில் அவரது மகள் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்கின்றார். பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவராக லாலுபிரசாத் யாதவ் உள்ளார். அவர்களுக்கு சிறு நீரக கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து சிறுநீரக மாற்றம் செய்ய வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்நிலையில் […]

You May Like