fbpx

வகுப்பறைக்குள் புகுந்து தாழ்ப்போட்ட ஆசிரியர்கள்! எட்டிப் பார்த்த மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் சக ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்த மாணவனை தலைமை ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகுலபொடி பகுதியில் நடைபெற்று உள்ளது.

முன்பெல்லாம் ஆர்வக்கோளாறில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தான் பாலியல் ரீதியான தவறான வழிமுறைக்கு செல்வார்கள். ஆனால் தற்போது மாணவர்களை நல்வழிப்படுத்தும் இடத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்களே இது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் சில குலப்பொடி பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்தபிரசாத்(48) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இவருடன் ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த ஒப்பந்த ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள் என்பதால் ஆசிரியர்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் நெருங்கிய பழக்கம் உண்டாகி அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது. பள்ளி நேரம் முடிவடைந்தவுடன் ஆசிரியையை தன்னுடைய அரைக்கு அழைத்துச் சென்று ஆனந்தபிரசாத் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேரில் பார்த்திருக்கிறார்கள். வழக்கம்போல தன்னுடைய அறைக்கு ஆசிரியையை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் ஆனந்த பிரசாத் உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனை ஒரு மாணவன் அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுப்பதை தலைமை ஆசிரியரும், அந்த ஆசிரியையும் பார்த்து விட்டனர். இதனால் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாயிருக்கிறார்கள். அந்த வீடியோவை அந்த மாணவன் வைரலாக பரப்பி விட்டான் என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவனை தலைமை ஆசிரியர் ஆனந்தபிரசாத் அழைத்து அந்த மாணவன் மீது மிக கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்து அந்த மாணவன் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து விசாரணை நடத்திய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஆனந்த பிரசாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் தலைமை ஆசிரியர் பணியில் இருந்தும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Next Post

கண்ணில் மிளகாய் பொடி தூவி மருமகனை வெட்டி சாய்த்த மாமனார்..!! நடுங்க வைக்கும் ஆணவக்கொலை..!!

Mon Dec 19 , 2022
சாதி மாறி திருமணம் செய்ததால் மருமகன் என்று கூட பாராமல் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி பகுதியைச் சேர்ந்தவர் தம்மனகவுடா. இவரது மகள் பாக்யஸ்ரீ என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த புஜபாலி கர்ஜகியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு இருவீட்டாருமே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பாக்யஸ்ரீ, […]

You May Like