fbpx

தனி அறையில் சிக்கிய காதல் ஜோடி.! தந்தை கொடுத்த கொடூர தண்டனை.! பரபரப்பு சம்பவம்.!

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த 20 வயது இளம் பெண் மற்றும் அவரது காதலன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலைகளை செய்ததாக இளம் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்திருக்கிறார். அவரை கைது செய்துள்ள காவல் துறையினர் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திர பிரதேசம் மாநிலத்தின் பிளசி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் நீது. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த தினத்தன்று தனது காதலியை அவரது வீட்டிற்கு சந்திக்க வந்திருக்கிறான் சச்சின்.

அப்போது சச்சின் மற்றும் நீது இருவரும் வீட்டின் தனி அறையில் இருந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் மகளின் அறையில் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த நீதுவின் பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது தங்களது மகள் வேறொரு இளைஞருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மகேஷ் வீட்டிலிருந்த மண்வெட்டியால் தனது மகள் மற்றும் அவரது காதலனை கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.

பின்னர் காவல் நிலையம் சென்றடைந்த அவர் நடந்த உண்மைகளை கூறி சரண் அடைந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த காதலர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காதல் விவகாரத்தில் தந்தையே மகளையும் அவரது காதலனையும் படுகொலை செய்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

"கடனை கொடுக்க முடியலையா.? அப்போ பொண்ண கொடு."! அதிகரித்து வரும் குழந்தை திருமணம்.! அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Thu Jan 4 , 2024
விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தங்களது மகள்களை பெரிய பணக்காரர்களுக்கு விட்டு வரும் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து வாங்கிய கடனை அடைக்க முடியாததால் அதற்கு ஈடாக தங்களது மகள்களை பெரிய பணக்காரர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் தகவல்கள் […]

You May Like