ஒரு பெண் தனது கணவரை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் உதவிப் பேராசிரியரான அனில் குமார் திரியா என்பவர் பணியாற்றி வருகிறார்.. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் அவரது மனைவி பல்கலைக்கழகத்தில் உள்ள அனில் குமாரின் அறைக்குள் நுழைந்து அதை உள்ளே இருந்து அறையை பூட்டியதாக கூறப்படுகிறது.. பின்னர் அவர் தனது செருப்பை கழற்றி தனது கணவரை சரமாரியாக தாக்குகிறார்.. நீங்கள் ஒரு பெரிய வேலை செய்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே அவர் தொடர்ந்து தாக்குகிறார். ஒருக்கட்டத்தில் அந்த உதவிப் பேராசிரியர் செருப்பை தூக்கி எறிந்தார்.. இதுதொடர்பான வீடியோ தற்போது வைராகி வருகிறது..
அறையில் சத்தம் கேட்டது நான்கு பல்கலைக்கழக ஊழியர்கள் அந்த இடத்திற்குச் சென்று கதவைத் திறக்கும்படி அந்தப் பெண்ணை வற்புறுத்தினர். எனினும் அப்பெண் அதை பொருட்படுத்தாததால், உதவி பேராசிரியரைக் காப்பாற்ற பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் அனுப்பப்பட்டனர். பின்னர் ஒருவழியாக அவர் கதவை திறந்ததாக கூறப்படுகிறது..
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த பெண்ணின் நடத்தை குறித்து பலரும் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பெண் தனது கணவரை ஏன் இவ்வாறு கொடூரமாக தாக்கினார் என்பது தெரியவில்லை..