’திமுகவை கரம் கோர்த்து அடிப்பாங்கன்னு நெனச்சா இவங்களே அடிச்சிக்கிறாங்க’..!! நடிகை கஸ்தூரி விமர்சனம்..!!

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகை கஸ்தூரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தின் போது ஒருவருக்கொருவர் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

இதில் அதிமுகவையும், பாஜகவையும் குற்றம் சாட்டி திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, பாஜகவையும் திமுகவையும் குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல, சின்னம் விவகாரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நாம் தமிழர் கட்சி பாஜகவை விமர்சிக்கிறது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளத்தில், “திமுகவின் ஆட்சி, பணம், ஊடக பலத்தை முறியடிக்கும் வகையில் பாஜக, அதிமுக, நாதக மூவரும் கரம் கோர்த்து அடிப்பார்கள் என்று ஆசைப்பட்டால், ஒருத்தர் மாற்றி ஒருத்தர் அவர்களே அடித்துக்கொள்கிறார்கள். என்னத்த சொல்லுறது. திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றுபடாத வரை தமிழகத்துக்கு விடிவில்லை” என்று கூறியுள்ளார்.

Read More : நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

Chella

Next Post

Vadivelu | வடிவேலு நாக்குல சனி இருக்கு..!! முதல்வரே சொல்லிட்டாரு..!! பிரச்சாரத்திற்கு வராதீங்க..!!

Fri Apr 5 , 2024
நடிகர் சிங்கமுத்து தேர்தல் பரப்புரை குறித்து பேசும்போது, வடிவேலு சென்ற இடமெல்லாம் தோல்வி என்று விமர்சித்தார். அதிமுக கட்சியின் ஆதரவாளராக இருந்து வரும் நடிகர் சிங்கமுத்து, தேர்தல் பரப்புரை குறித்து ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். திமுக கட்சியை சாடிய அவர், அதிமுக ஆட்சி நன்றாக இருந்ததாகவும், இரட்டை இலையை ஒன்றும் பண்ண முடியாது என்றும் கூறினார். பின்னர் நடிகர் வடிவேலு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவருக்கு அரசியலில் யோகம் […]

You May Like