மாற்றுத்திறனாளிகள் குறையை இனி குறிப்பிடக் கூடாது…..! இதை மட்டும் செய்தால் போதும் வெளியானது புதிய அறிவிப்பு…..!

பல்கலைக்கழக சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு புதிய சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழு நோயாளி உள்ளிட்ட வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையின்போது இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


அதற்கு பதிலாக மாற்றுத் திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று கூறப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட குறையை சுட்டிக்காட்டி அதன் மூலமாக நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் விதத்தில் இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு, பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவது தவிர்க்கப்படும். இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்தால் போதும். தேர்வுக்கான சலுகைகள் கோருதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்போதும் மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிட்டால் மட்டும் போதும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

தாயாரின் காலை பிடித்து கதறி அழுத ஓபிஎஸ்……! தேற்ற முயற்சி செய்த குடும்பத்தினர்……..!

Sat Feb 25 , 2023
முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (96) வயது மூப்பின் காரணமாக ,உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்ற வியாழக்கிழமை தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரிய குளத்தில் இருக்கின்ற பன்னீர்செல்வத்தின் இழப்பிற்கு பழனியம்மாள் கொண்டுவரப்பட்டார். இந்த சூழ்நிலையில் தான் பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அவருடைய இல்லத்தில் நேற்று இரவு […]
OPS mother

You May Like