#சென்னை :திருமணம் நிகழ்ந்த 10 நாட்களில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. வீடு திரும்பிய பெற்றோர்க்கு காத்திருந்த அதிர்ச்சி..! 

சென்னை மாநகர பகுதியில் உள்ள தண்டையார் பேட்டையில் பிரகாஷ் என்பவர் தனது மனைவி கௌரி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ரேகா(35) என்ற மகள் உள்ளார். இவர் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். 


சென்ற 14-ஆம் தேதி அன்று வடபழனி முருகன் ஆலயத்தில் ராஜாசேகரன் மற்றும் ரேகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்ற 19-ஆம் தேதி ரேகா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த படியே வேலைக்கு சென்று வந்துள்ளார். 

ராஜசேகரன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்ல ஞாயிற்றுக்கிழமை வருவதாக மாமனாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.அன்றைய தினத்தில் ரேகாவின் பெற்றோர்கள் காய்கறி வாங்குவதற்கு மார்க்கெட் சென்றுள்ளனர். 

இந்த நிலையில் வீட்டில் தனிமையாக இருந்த மகள் ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேகாவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

1newsnationuser5

Next Post

24 மணி நேரத்தில் நாடு முழுவதும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு...? வெளியான விவரம்....

Wed Nov 30 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 279 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 05 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1807 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
COVID 1583870972

You May Like