தூள்..! வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு 7 நாளில் சான்றிதழ்..! மத்திய அரசு புதிய இணையதளம்…!

Central 2025

வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் சமர்ப்பிக்கப்படும் இந்திய குடிமக்களின் ஆவணங்களை சரிபார்த்து சான்றளிப்பதற்காக தேசிய தகவல் மையத்துடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் இ-சனத் என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை அலுவலகத் தலைவர்; இந்தத்தளத்தில் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி விளக்கினார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு இணையவழியில், முகமற்ற, பணமில்லா மற்றும் காகிதமில்லா ஆவண சரிபார்ப்பு/சான்றளிப்பு ஆகியவற்றிற்கான மையப்படுத்தப்பட்ட சேவையை வழங்குவது இ-சனத் தளத்தின் நோக்கமாகும்.

https://esanad.nic.in/register என்ற தளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம்.‌ பதிவு செய்த பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களை டிஜிட்டல் களஞ்சியத்திலிருந்து நேரடியாகவோ, ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை பதிவேற்றம் செய்தோ தளத்தில் பதிவிடலாம். ஆவணங்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. இந்த சரிபார்ப்பைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் 7 வேலை நாட்களுக்குள் டிஜிட்டல் சான்றளிப்பை வெளியிடுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிகழ்நேர நிலையை இணையவழியில் கண்காணிக்கலாம்.

https://esanad.nic.in/eregister என்ற இணைப்பைப் பயன்படுத்தி டிஜிட்டல் ஆவணங்கள் அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை வெளிநாட்டு துறைகளும் அதிகாரிகளும் சரி பார்த்துக் கொள்ள முடியும், இது இந்த இ-சனத் தளத்தின் மிக முக்கியமான அம்சமாகும். மறு சான்றளிப்பு தேவையில்லாத சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள் 114 ஹேக் மாநாட்டு நாடுகளால் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நாடே அதிர்ச்சி!. பிரதமர் மோடியின் பெயரில் ரூ.2,700 கோடி மோசடி!. நாடு முழுவதும் 150 வழக்குகள் பதிவு!.

Sat Sep 20 , 2025
நாடு முழுவதையும் உலுக்கிய ஒரு பெரிய மோசடியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. தோலேராவில் முதலீடு என்ற பெயரில் ரூ.2,700 கோடி மோசடி செய்த கும்பல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜுகல் கிஷோர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத்தில் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சமீபத்திய திட்டங்களில் ஒன்றாகும். இந்தநிலையில், குஜராத்தின் தோலேராவில் முதலீட்டில் அதிக லாபம் தருவதாக வாக்குறுதி அளித்து, […]
Rs. 2700 crore fraud pm modi

You May Like