அதிமுகவில் அடுத்த பரபரப்பு…! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகி நீக்கம்… இபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…!

admk 2025

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், வாக்குகளை சேகரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதிமுக தரப்பில் தொண்டர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தேர்தலில் ஒரு வாக்கில் தோல்வி அடைந்தாலும் தோல்வி, தோல்வி தான். ஆனால் அதிமுக தலைமையோ பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்காமல் அடுத்தடுத்து கட்சி நிர்வாகிகள் நீக்கி வருகிறது.


இந்த நிலையில், அதிமுகவில் தொடர்ந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ் உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, அவரையும் அவரை ஆதரித்த நிர்வாகிகளையும் நீக்கியுள்ளார். இந்த நிலையில் கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, C. பாஸ்கர் (எ) N.C. பார்த்தசாரதி, திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அதிமுகவில் இரந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்; கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, C. பாஸ்கர் (எ) N.C. பார்த்தசாரதி, திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

7வது சம்பளக் கமிஷன்!. தீபாவளிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்வு!. வெளியான தகவல்!

Sat Sep 13 , 2025
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து, விலைவாசி உயர்வை சமாளிக்க நிதியுதவி அளிக்கும் வகையில், அரசு அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைத்தொகை (DR) உயர்த்தவுள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த உயர்வு சுமார் 6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில், இது 7 சதவீதம் வரை கூட உயரக்கூடும். இதன் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கும் […]
modi money

You May Like