கனமழைக்கோ, இடியுடன் கூடிய மழைக்கோ வாய்ப்பில்லை… மிதமான மழை நீடிக்கும்…

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வரும் 26-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், நேற்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்திய மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட வங்கக் கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப பகுதிகளை ஒட்டி நிலவுகின்றது.

நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திிரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகின்றது.

இதன் காரணமாக வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

Next Post

ஆட்டோ குண்டு வெடிப்புக்கு முன் ஒத்திகை..!! என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

Tue Nov 22 , 2022
மங்களூருவில் ஆட்டோ குண்டு வெடிப்புக்கு முன் முகமது ஷரீக், சிம்மோகாவில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது என்ஐஏ விசாரணையில் வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சனிக்கிழமை அன்று ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டனர். அதில், ஆட்டோ ஓட்டிவந்த முகமது ஷாரிக், கர்நாடக மாநிலம் சிவமோகா […]
ஆட்டோ குண்டு வெடிப்புக்கு முன் ஒத்திகை..!! என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!

You May Like