இந்தியா முழுவதும் தற்போது ஒரு புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. அதனை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசின் சார்பாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் சுமார் 1000 பகுதிகளில் வரும் 10ம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது நாடு முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎன்ஆர் தெரிவித்திருக்கிறது.
தனிமனித இடைவேளையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், கொசு உற்பத்தியை தடுக்க காணமுடன் செயல்பட்டு வருகின்றோம். காய்ச்சலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழகத்தில் வரும் 10ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.