இனி திருமண பதிவு செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகம் தேவை இல்லை. புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள், வீட்டிலிருந்தே ஆன்லைனில் தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பதிவுத்துறையில் கட்டண மோசடி, லஞ்சம், அலுவலக அலையடிப்பு ஆகியவை பொதுமக்களை திருமண பதிவு செய்வதில் விருப்பமில்லாமல் இருக்கச் செய்திருந்தன. ரூ.200 என அரசுத்தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்குப் பதிலாக, ரூ.10 ஆயிரம் வரை சிலர் வசூலிப்பதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய முறையின் சிறப்புகள்:
* தம்பதிகள் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
* ஆவணங்களை ஒன்லைனிலேயே பதிவேற்றம் செய்து, கட்டணமும் செலுத்தலாம்.
* எந்த இடத்துக்கும் செல்ல தேவையில்லை.. நேரமும் செலவும் இரண்டும் சேமிப்பு.
* சரியான ஆவணங்கள் இருந்தால் உடனடியாக திருமண சான்றிதழ் வழங்கப்படும்.
2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், திருமணங்கள் பதிவு கட்டாயம் என்பதை வலியுறுத்தியது. ஆனால், பதிவு செய்ய தவறும் தம்பதிகள் அரசின் நலத்திட்டங்களிலிருந்து தவிர்க்கப்படுகிறார்கள். இதனிடையே 2020-ல் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. மணமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள அலுவலகத்திலும் பதிவு செய்யலாம் என்ற புதிய சலுகை. ஆனாலும், பதிவு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
இந்நவீனமயமன திட்டம் முதற்கட்டமாக தமிழ்நாடு திருமணச் சட்டம் கீழ் பதிவு செய்பவர்களுக்கு அமையும். விரைவில் ‘ஸ்டார்–3’ எனும் புதிய சாப்ட்வேர் அறிமுகமாகிறது, அதில் மக்கள் தாங்களே பதிவு செய்யும் வசதி முழுமையாக செயல்படுத்தப்படும்.
நன்மைகள்:
* அரசு நலத்திட்டங்களைப் பெற எளிதாகி விடும்.
* மோசடி திருமணங்களைத் தடுக்கும்.
* சுப்ரீம் கோர்ட்டு விதிமுறைகளுக்கேற்ப முறையான பதிவு.
* அரசின் பதிவுத் துறையின் நம்பிக்கையை மேம்படுத்தும்.