தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கிய ஒரு பேட்டி அதிமுக தரப்பை கொந்தளிக்க வைத்து இருக்கிறது. அதாவது அந்த பேட்டியில் அண்ணாமலை பேசியிருப்பதாவது, தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. நாட்டில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் என்று கூட சொல்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சென்னை டி நகர் இருக்கின்ற பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கரூர் நாகராஜன் பேட்டி அளித்தபோது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கோ, அவரை எதிர்ப்பதற்கோ அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கூறியிருக்கிறார்.