உப்புமா சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதோடு, இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக உள்ளது.
உப்புமா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெறித்து ஓடுவார்கள். ஆனால் உப்புமாவில் நிறைந்துள்ள வைட்டமின்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. குறிப்பாக இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.இந்த உப்புமாவை நாம் எடுத்துக்கொள்ளும் போது நாம் மிக சுறுசுறுப்பாக உணரமுடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூட கூறுகின்றனர். மேலும் இந்த உப்புமாவுடன் சில காய்கறிகளையும் சேர்த்து சமைக்கும் பொழுது, இதில் நிரம்பியுள்ள புரதச் சத்துக்களும் நமக்கு கிடைக்கிறது.
ரவையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இது உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கிறது. உப்புமாவில் வேர்க்கடலை, முந்திரி உள்ளிட்ட பல்வேறு பருப்புகளை உப்புமாவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் சுவை கூடுவதுடன் சத்துக்களும் அதிகரித்து உடல்நலத்தை பாதுகாக்கிறது.
ரவையில் நிரம்பியுள்ள பொட்டாசியம், நமது சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கிறது. இது நமது சிறுநீரகத்தில் உள்ள செயல்பாட்டை விரிவாக்குகிறது.ரவை உப்புமாவில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை.அவலில் செய்த உப்புமாவோ, ஆரோக்கியமானது. முதியவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது என்று மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
கோதுமை ரவையில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்ட தாதுக்கள் உங்கள் நரம்பு மண்டலம் மற்று எலும்புகள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதேபோல், கோதுமை ரவையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதிலுள்ள செலீனியம் சத்தானது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.