நொச்சி இலையில் இத்தனை பயன்கள் உள்ளதா?

நொச்சி இலை பெரும்பாலும் ஆவி பிடிக்க பயன்படுத்தப்படுகின்றது. இது தவிர பல்வேறு பயன்பாடுகள் நொச்சி இலையில் உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிடவும் இலகுவாக இருக்கும். சளி அடைப்பு போகும். இதற்காக வீட்டில் பாட்டிமார்கள் அடிக்கடி ஆவி பிடிக்க சொல்வார்கள். இந்த இலையை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து குளித்தால் கூட சளிக்கு இதமாக இருக்கும்.


ஆயுர்வேதம் , சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை.  நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

202108220254437961 Indias highest altitude herbal park inaugurated near SECVPF

நீர் நிலைகளில் காணப்படும் நீர்நொச்சி, ஐந்து இலை கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைகளில் காணப்படுகிறது. இந்த நொச்சி இலையின் தாவரவையல் பெயர் விட்டெக்ஸ் நெகுண்டோ என அழைக்கப்படுகின்றது.

இந்த கரு நொச்சிதான் அதிக மருத்துவ பலன் கொண்டது. இது காட்டுப்பகுதிகளிலும் மலைப் பகுதிகளிலும் மட்டுமே அரிதாக கிடைக்கின்றது. இதன் வளர்ப்பு தற்போது குறைந்துவிட்டது. இந்த நொச்சி இலைகளில் ஒவித நறுமண வாசனை இருக்கிறது. அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. எனவேதான் கடுமையான நெஞ்சு சளி, இருமல் இருப்பவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடிக்க சொல்கின்றனர். இதனுடன் கற்பூரவல்லி அல்லது துளசி சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

கொரோனா

நொச்சி இலை போட்டு கொதிக்க வைத்த நீரை குளிக்க பயன்படுத்தினாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி அந்த புகையை சுவாசிக்க தலைவலி தீரும். ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்கவும். மற்றொரு வழியாக நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரம் குறையும்.

புண் காயங்கள் இருந்தால் நொச்சி இலை சாறை எடுத்து நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து அதை பாட்டிலில் சேமித்துக்கொண்டு தினமும் தேய்த்து வர புண் ஆறிவிடும். இச்செடியில் மலர்கள் பூக்கும்போது கொத்துக்கொத்தாக அடர்ந்த கத்திரி பூ நிறத்தில் பூத்திருக்கும். இந்த பூக்களில் உற்பத்தியாகிற தேனுக்கு உடல் வலியை, வீக்கத்தைப் போக்குகிற தன்மை உண்டு.

nochi

உங்கள் வீட்டிலும் நொச்சி வளர்க்க நினைத்தால் ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரும். இதனை வீட்டில் வளர்ப்பதால் பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். இவை மிக எளிதாக வளரக்கூடியது.

Next Post

அதிர்ச்சி...! விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மர்மமான முறையில் மரணம்...! விசாரணை தீவிரம்...!

Tue Nov 15 , 2022
பிரபல போஜ்புரி எழுத்தாளர் பிரஜ்கிஷோர் துபே, அவரது நண்பரின் குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போஜ்புரி இலக்கியத்தில் தனது பங்களிப்பிற்காக குடியரசுத் தலைவரால் விருது பெற்ற துபே, சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் நகர் பகுதியில் உள்ள நண்பரின் ஃப்ளாட்டின் சாவியை எடுத்துச் சென்று, ஒரு முக்கியமான கட்டுரையை எழுதுவதற்காக அமைதியான முறையில் தனியாக இருக்க விரும்புவதாகக் கூறினார். ஆனால் அங்கே […]
images 2022 11 15T060736.216

You May Like