ஓசூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில தொழிலாளி……! போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது…..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளியை சேர்ந்தவர் சத்யா. இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்து விட்ட நிலையில், இவர் தன்னுடைய 6️ வயது மகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவரது மகன் அந்த பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.


அப்போது அவர்களின் வீட்டின் அருகே வசித்து வரும் சுனில் வர்மா (32) என்பதால் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக தெரிவித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சற்று நேரம் கழித்து அந்த சிறுமி அழுதவாறு சுனில் வர்மா வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். வெகு நேரமாக அழுது கொண்டே இருந்ததால் சிறுமியிடம் அவருடைய தாய் இது பற்றி விசாரித்து இருக்கிறார்.

அப்போதுதான் அந்த சிறுமிக்கு சுனில் வர்மா பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இது குறித்து சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காண நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த காரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுனில் வர்மாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

தங்கம் விலை அதிரடி உயர்வு!! நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!

Wed May 24 , 2023
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளன. நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.   22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் […]
gold jwellery hallmarking how to check 1677907251073 1677907251303 1677907251303

You May Like