நாளை பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முறமாக செய்து வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த ஒரு மாத காலமாக செய்து வந்தார்கள். அந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணி உடன் ஓய்வு பெற்றது.
ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக என்று இரு தரப்பும் பல அதிரடி பிரச்சாரங்களையும், சூறாவளி பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கடைசி நாள் பிரச்சாரமான நேற்றைய தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது நேற்றைய தின பரப்பறையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், விதிமுறையை மீறி முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு விட்டதாக எதிர்க்கட்சியான அதிமுக குற்றம் சுமத்தி இருக்கிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் முதலமைச்சரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தெரிவித்து அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டவரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.
அதிமுக ஒருபுறம் புகார் வழங்கிக் கொண்டிருக்க மறுபுறம் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதாவது மகளிர்க்கு 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் எனவும் நேற்று மாலை நடைபெற்ற பரப்புரையின்போது ஸ்டாலின் விளக்கம் அளித்திருக்கிறார்.
அத்துடன் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை தொடர்பாக நமக்கு இருக்கும் அக்கறையை விட எதிர்க்கட்சிக்கு தான் அதிகமாக அக்கறை இருக்கிறது என்பதைப் போல காட்டிக் கொள்வதற்காக என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் பரப்புரையில் அது தொடர்பாக நான் தெரிவித்து விட்டேன்.
உடனடியாக ஸ்டாலின் எப்படி சொல்லலாம் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பாக புகார் அளித்து விட்டார்கள் நீங்கள் தானே என்னாச்சு, என்னாச்சு என்று கேள்வி எழுப்பினார்கள் அதற்குத்தான் பதில் தெரிவித்திருக்கிறோம்.
அது தேர்தல் விதிமுறைக்கு புறம்பானது அல்ல. ஏற்கனவே நாங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.