பலாத்காரம் செய்து வீடியோ.. 12 வயது பெண்ணுக்கு கூட்டு பலாத்காரம்.! வைரலான வீடியோ.!

ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் பொறியியல் படித்த டிப்ளமோ மாணவர் உட்பட மூன்று மைனர் சிறுவர்களை, 12 வயது நிறைந்த மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள குற்றச்சாட்டில் போலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதனிடையில் சில நாட்களுக்கு முன்பு இது நடந்திருந்தாலும் அச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுவரை சிறுமி நடந்ததை தன் பெற்றோரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை. இறுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் அந்த வீடியோவை பார்த்து, இதுபற்றி அப்பெண்ணின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தந்தை தன் மகளிடம் விசாரித்தபோது, ​​தனக்கு நிகழ்ந்த கொடுமையை அச்சிறுமி கூறியுள்ளார். “தந்தை கொடுத்த புகாரைத் தொடர்ந்து, அந்த மூன்று சிறுவர்கள் மீது ஐடி சட்டத்தின், போக்சோ சட்டம், ஐபிசி மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன ,” என காவல்துறையினர் கூறினார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் கூறியது, குற்றம் சாட்டப்பட்ட அந்த சிறுவர்கள் 14-17 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் வீடியோ கிளிப்பை வைத்து மைனர் அச்சிறுமியை மிரட்டத் தொடங்கியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்திருக்கின்றனர். மிரட்டலில் போது 20,000 ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் என்றால், வீடியோவை பகிரங்கப்படுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் பணம் கொடுக்க மறுத்ததால், அந்த சிறுவர்கள் வீடியோவை சமூக ஊடக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

1newsnationuser5

Next Post

பாலியல் வழக்கு..!! இனி இருவிரல் பரிசோதனை செய்ய தடை..!! உச்சநீதிமன்றம் அதிரடி

Mon Oct 31 , 2022
பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தும் முறைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இன்றும் இதுபோன்ற சோதனை நடத்தப்படுபடுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தனர். எனவே, இரு விரல் சோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா? என […]
பாலியல் வழக்கு..!! இனி இருவிரல் பரிசோதனை செய்ய தடை..!! உச்சநீதிமன்றம் அதிரடி

You May Like