மகளின் சாதி கடந்த காதலுக்கு எதிப்பு.. ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட RDO – ஆசிரியை தம்பதி..!! பரபர பின்னணி..

namakkal death

நாமக்கல்லில் ஆர்டிஓ அலுவலக ஊழியர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆசிரியை பிரமிளா ஆகியோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.


நாமக்​கல் மோக​னூர் சாலை கலை​வாணி நகரைச் சேர்ந்​தவர் சுப்​பிரமணி​யன்​(55). இவர் திருச்​சி​யில் வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வல​ராகப் பணிபுரிந்து வந்​தார். இவரது மனைவி பிரமிளா (51). மோக​னூர் அரு​கே​யுள்ள ஆண்​டாள்​புரம் அரசு உயர்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரியை​யாகப் பணிபுரிந்து வந்​தார். இவர்​களது மகள் சம்​யுக்தா (25). மகன் ஆதித்யா (21).

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை நாமக்​கல் அருகே வகுரம்​பட்டி என்ற இடத்​தில் நாமக்​கல்​-கரூர் ரயில்வே தண்​ட​வாளத்​தில் சுப்​பிரமணி​யன் மற்​றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் சிதறிய நிலை​யில் இறந்து கிடந்​தனர். தகவலறிந்து வந்த சேலம் ரயில்வே போலீ​ஸார் இரு​வரின் உடல்​களை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணியின் மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அரசு ஊழியர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மகளின் காதல் விவகாரத்தில் ஆர்டிஓ மற்றும் ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்​கொலை எந்​தப் பிரச்​சினைக்​கும் தீர்வு இல்​லை. தற்​கொலை எண்​ணம் தோன்​றி​னால் உடனடி​யாக மாநில தற்​கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் உதவி எண்- 022-25521111 ஆகிய​வற்​றில் தொடர்​பு​கொள்​ளலாம்.

Read more: Alert: 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று… மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை…!

Next Post

திடீரென முடங்கிய ஜியோ.. பயனர்கள் கடும் அவதி.. குவியும் புகார்கள்..

Mon Jul 7 , 2025
ஜியோ நெட்வொர்க் நேற்றிரவு திடீரென முடங்கியதால் லட்சக்கணக்கான பயனர்கள் அவதி அடைந்தனர்.. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் நேற்றிரவு திடீரென முடங்கியது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது… மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் 10க்கும் நகரங்களில் உள்ள மக்கள் இரவு 8:10 மணியளவில் மொபைல் சிக்னல்கள் மற்றும் இணைய அணுகலை இழந்தனர். மொபைல் போன்கள் “Emergency Calls Only” என்ற சிக்னலை காட்டியதாக ஆயிரக்கணக்கான […]
113418798 1

You May Like