#Awards: மூன்று சிறந்த கலைஞர்களுக்கு பத்ம விருதுகள்…! யார் யாருக்கு வழங்கப்படும் தெரியுமா…?

கலை மற்றும் பொழுதுபோக்கு துறையில் மூன்று சிறந்த கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் பொழுதுபோக்கு துறையில் சிறந்த பங்களிப்புகளுக்காக, உஸ்தாத் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மற்றும் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ மற்றும் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ பாடலான ‘நாட்டு நாடு’ பாடலுக்கு இசையமைத்ததில் பிரபலமானவர். நடிகை ரவீனா டாண்டன் 1990 களில் பிரபலமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். விருது பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த விருதுகள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாக்களில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், 3 பரிவாக 106 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

ஆரம்பம்...!வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...!

Thu Jan 26 , 2023
அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like