திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில், கேரளா – கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
முருகப் பெருமானின் அருளைப் பெற முருக பக்தர்கள் அனைவரும் மேற்கொள்ளும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று கந்த சஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்தில் முருகனை நினைத்துத் தவமிருந்து வேண்டிக்கொள்ளும் இந்த விரதத்தின் மூலம் பக்தர்கள் பல்வேறு விதமான வேண்டுதல்களையும், பலன்களையும் அடைகின்றனர். குறிப்பாக, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் கிடைக்கும் சிறப்பான பலன்கள் குறித்து அறியலாம். திருப்பரங்குன்றம் (முதல் படைவீடு) : இது முருகப்பெருமான் […]
ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 20) அதிகாலை எமிரேட்ஸ் போயிங் 747 சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்ததில் விமான நிலைய ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் துபாயில் இருந்து விமானம் வந்த சிறிது நேரத்திலேயே, விபத்துக்குள்ளானது. ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மற்றவர் பின்னர் மருத்துவமனையில் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. என்ன நடந்தது? ஏபிசி செய்தியின்படி, […]
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் இன்று முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம். அதன்படி, பராமரிப்பு பணி […]
பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள்,திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்; தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 01.04.2025 முதல் 18.10.2025 வரைமொத்தமாக 11,87,000 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்கள் 34,401 […]
இந்தியாவின் ஆதார் முறையால் ஈர்க்கப்பட்டு ‘பிரிட் கார்டு’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார். இந்தியாவின் ஆதார் முறையை “குறிப்பிடத்தக்க வெற்றி” என்று பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , “பிரிட் கார்டு” எனப்படும் தேசிய டிஜிட்டல் ஐடியின் சொந்த பதிப்பை இங்கிலாந்து உருவாக்கும் என்று அறிவித்துள்ளார் . இந்த முயற்சி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் சட்டவிரோத வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமந்தரம் உத்தரவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து, மாவட்ட […]
ICC மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில், இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து , களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் எனவும், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வடகிழக்கு […]
தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் […]

