கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே வேற யாராலும் பக்கத்துல கூட வர முடியாது என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், தே.மு.தி.க-வை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், “நான் மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் […]

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், TikTok வீடியோக்கள் அல்லது YouTube Shorts-களை தொடர்ந்து ஸ்க்ரோல் செய்வது நேரத்தை கழிப்பதற்கான வழியாக தோன்றலாம். ஆனால் மூளையில் ஏற்படும் விளைவுகள் நாம் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானதாகவும் கவலையளிப்பதாகவும் இருக்கும் என்று நரம்பியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பல ஆய்வுகள் தெரிவிப்பதாவது, குறுகிய வடிவிலான வீடியோக்கள் (short-form videos) மது போன்ற போதைப் பொருட்களைப் போலவே “reward pathways”-ஐ மூளையில் தூண்டுகின்றன. நீண்டகாலத்தில் இது உந்துதல் (motivation), […]

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழியின் இலக்கிய திறன் மேம்படுவதற்காக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல்’ தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம், மாணவர்களின் இலக்கியப் பார்வை, வாசிப்பு நுண்ணறிவு, மொழிப்பண்பு ஆகியவை மேம்படும் வகையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் […]

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களது ஆளுமை, மனநிலை, தொழில்நடத்தல் என பலவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ரேடிக்ஸ் எண் : ஒருவரின் பிறந்த நாளை வைத்து இந்த ரேடிக்ஸ் எண்ணை கணக்கிட வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் பிறந்த தேதி 22 என்றால் உங்களின் ரேடிக்ஸ் எண் 4 ஆகும். பிறந்த தேதி இரட்டை எண்ணில் இருந்தால் அதை […]

சென்னை மாநகரப் பகுதிகளில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சமூட்டும் […]

ஆன்மீக மரபுகளில் எலுமிச்சை பழம் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமண விழாக்களில் இருந்து தினசரி பூஜைகள் வரை என அனைத்திற்கும் எலுமிச்சை பயன்படுகிறது. இது வெறும் உணவுப் பழமல்ல, ஆன்மீக ஒளிக்குறியாகவும், ஆற்றல் வளத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. பழம்பெரும் புராணக் கதைகளில் எலுமிச்சையின் தோற்றம் தொடர்பான ஒரு சுவாரசியமான குறிப்பு இடம்பெறுகிறது. நிம்பாசுரன் எனும் அசுரன், மக்களைக் கஷ்டப்படுத்தும் வகையில் பஞ்சத்தை ஏற்படுத்தினான். அவனது கொடூரம் அதிகரித்தபோது, சாகம்பரி தேவி அவதரித்து […]

தமிழகத்தில் 30 சதவீத மானியத்துடன்,, உழவர் நல சேவை மையங்களை அமைக்கலாம் என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில், முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் 1,000 […]

ரஷ்ய ஹேக்கர் குழு ஒன்று உக்ரைனிய இராணுவ தலைமையகத்தை ஆன்லைனில் ஹேக் செய்து ஆவணங்களைத் திருடி சமூக ஊடகங்களில் கசியவிட்டுள்ளது. ஹேக்கர் குழுவால் கசிந்த ஆவணங்கள், பிப்ரவரி 2022 முதல் இதுவரை 1.7 மில்லியன் அதாவது 17 லட்சம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இந்த வீரர்களில் பெரும்பாலோர் 19-24 வயதுடையவர்கள். கசிந்த இந்த ஆவணம் குறித்து உக்ரைனின் பொதுப் பணியாளர்களால் எந்த அறிக்கையும் […]

நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் 15-ம் தேதி […]

ஆளுநர் பல ஆண்டுகளாக மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், சட்டமன்றம் “செயல்படாமல்” போனால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லையா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றங்கள் தலையிடுவதையும், பிணைப்பு வழிமுறைகளை வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய முட்டுக்கட்டையைச் சமாளிக்க ஒரு அரசியல் தீர்வைக் காணலாம் என்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியபோது, ​​தலைமை […]