பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ஆமிர் கான்.. இவர் தனது சக்திவாய்ந்த நடிப்பின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற நடிகராக வலம் வருகிறார். அவரின் திரை வாழ்க்கை மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் ஆமிர் கானின் தம்பி வைத்த பகீர் குற்றச்சாட்டு தான்.. ஆமிர் கான் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஜெசிகா ஹைன்ஸுடன் திருமணத்தை மீறிய கள்ள உறவை கொண்டிருந்ததாகவும், […]

மழைக்காலம் வந்துவிட்டால், உடனே நமக்கு உடல் ஆரோக்கியம், வீடு சார்ந்த பாதுகாப்பு ஆகியவை தான் நினைவுக்கு வரும். ஆனால், இத்துடன் கூடுதலாக கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. இது மின் சாதனங்கள் மற்றும் மின் பாதுகாப்பு. மழையுடனும் ஈரப்பதத்துடனும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்தால், மின்சார தாக்கங்கள், சாதனங்கள் பழுது போவது, தீவிபத்துகள் கூட நிகழ நேரிடும். மழையில் சிலர், கசிவுள்ள சுவர்களில் அல்லது ஈர நிலத்தில் கூட, […]

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவின் கம்சாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியா. இவர், தையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி (வயது 53). இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சுப்பிரமணியா வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், அவரது சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசார், மீனாட்சிக்கும், சுப்பிரமணியாவின் உறவினரான பிரதீப் (33) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. புதிதாக […]

லட்சத்தீவு இந்தியாவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இது, கண்கவர் பவளப்பாறைகள், அழகிய வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் தெளிவான நீல நீர்நிலைகளுக்கு பெயர் பெற்றது. அதன் அழகிய நிலப்பரப்புகள் காரணமாக, மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தங்கள் அழகிய விடுமுறையை அனுபவிக்க முடிகிறது. ஆனால் அனைவரும் விரும்பும் செல்லப்பிராணிகளுக்கு லட்சத்தீவில் கடுமையான தடை உள்ளது, மேலும் அதை தீவுகளில் கண்டுபிடிப்பது கடினம். இந்தியாவில் பாம்பு இல்லாத ஒரே […]

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இதயம் தொடர்பான நோய்களால் இறந்தனர். இந்த இறப்புகளில் 85 சதவீதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.. மார்பு வலி என்பது மாரடைப்பின் முக்கிய அறிகுறியாகும். மார்பில் அசௌகரியம் மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பு மக்கள் பெரும்பாலும் தங்கள் மார்பில் அசௌகரியத்தை உணர்கிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தத்தை உணருவது போன்ற மாரடைப்பின் அறிகுறியாக மக்கள் […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ..73,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் […]