சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை […]

வார இறுதிநாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்கேற்ப சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாக்குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 340 பேருந்துகள் […]

கானாவில் (Ghana) ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் 2 அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து நேற்று (06) காலை 9.12 மணியளவில் அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இதையடுத்து, புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. […]

The Hundred கிரிக்கெட் லீக் தொடரில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை ரஷீத் கான் படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர், டி20 கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி அரிய சாதனை […]

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இன்று பங்கேற்கவிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணை படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக […]

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்து டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூடுதலாக 25% வரியை விதித்தார். ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் ஒரு நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். முன்னதாக ஜூலை 30 ஆம் தேதி, […]

விளம்பர நாடகங்கள் நடிக்கும் நேரத்தில், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து முதலமைச்சர் சிந்திப்பது, தமிழக மக்களுக்கு நல்லது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்று திருப்பூரில் எஸ்.ஐ கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழகத்தில்‌ அதிகரித்து […]

ஒரு காலத்தில் ரூ.40 தான் சம்பளம் பெற்ற இந்த நபர் பின்னர் ரூ.107 கோடி ஆஃபரை நிராகரித்தார்.. அவரின் வெற்றிக்கதை குறித்து தற்போது பார்க்கலாம்.. பல பிரபலமான ஆசிரியர்கள் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அத்தகைய ஒரு ஆசிரியர் கான் சர், அவர் தனது தனித்துவமான கற்பித்தல் பாணிக்கு பெயர் பெற்றவர். அவர் பாட்னாவில் கான் ஜிஎஸ் ஆராய்ச்சி மையம் என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்துகிறார். அவர் 2019 இல் […]

பிரபல கார் பிராண்டான மாருதி சுசுகி இந்தியா, இந்த மாதம் அதன் ஆரம்ப நிலை மாடலான எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) கார்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் இந்த காரை வாங்கினால், ரூ.65,000 வரை தள்ளுபடி பெறலாம். எஸ்-பிரஸ்ஸோவின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் நிறுவனம் அதிகபட்ச தள்ளுபடியை வழங்குகிறது. எஸ்-பிரஸ்ஸோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.26 லட்சம் முதல் ரூ.6.12 லட்சம் வரை உள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி […]