நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம், சோழர் நாடு ஊராட்சிப் பகுதியில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் பள்ளிக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (55). விவசாயியான இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில், செல்வராஜின் வீட்டுக்கு இவர்களது உறவினர் காசி துரைசாமி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, துரைசாமிக்கும் செல்வராஜின் […]