தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தி அலை நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெகவிற்கு 39% ஆதரவு கிடைத்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த தனியார் செய்தி சேனல் நடத்திய ஆய்வில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தலைமுறை வாக்காளரிடம் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு, திமுக […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-21 வரை எம்எல்ஏவாகப் பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். அதே காலத்தில் அவரது கணவரான பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக இருந்தார். பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதன் பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக சத்யா பன்னீர்செல்வம் […]

நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று […]

இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து மத்திய தரைக்கடலில் அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் அடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளாக காசாவில் ஹமாஸுடன் போர், ஹெஸ்புல்லாவை தாக்குவதாக லெபனான் மீது போர், ஈரானோடு யுத்தம் என்று அடுத்தடுத்து இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் இஸ்ரேல் […]

நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சையாக பேசிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை […]

பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். சிறுத்தை, மதராஸி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நலக்குறைவால் காலமானார். ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இவர், கடந்த சில தினங்களாகவே சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நள்ளிரவில் அவர் உயிர் பிரிந்தது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மீன் வியாபாரம் செய்ததால் ஃபிஷ் வெங்கட் என அழைக்கப்பட்டார். வெங்கட்டின் உடல்நிலை குறித்து தெரிய […]

சர்வதேச ராயல் கரீபியன் பயணக் கப்பலில் இருந்த 140க்கும் மேற்பட்ட பயணிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. 2002 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2019 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட நேவிகேட்டர் ஆஃப் தி சீஸ் கப்பல், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெக்சிகோ இடங்களுக்கு பயணம் செய்து வருகிறது. 3,380 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பலில், 17 பார்கள், 12 […]

இந்தியாவில் ராமர் வணங்கப்படும் இந்த கிராமத்தில், ஹனுமான் பெயரை உச்சரிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. கலியுகத்தில் அதிகம் வணங்கப்படும் கடவுள்களில் ஒருவராக ஹனுமான் இருக்கிறார்.. ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும் ஹனுமான் கோயில் இருப்பதை நாம் பார்க்கலாம்.. ஆனால் இந்தியாவில் ஹனுமான் என்ற பெயரை உச்சரிப்பது தடைசெய்யப்பட்ட ஒரு இடம் உள்ளது. ஆம்.. இந்தியாவில் ராமர் வழிபடும் ஒரு கிராமத்தில் ஹனுமானை வணங்க தடை செய்யப்பட்டுள்ளது.. இங்கு ஹனுமானுக்கு எந்த கோயிலும் […]

சென்னையில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். எனவே, தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்விக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உயர்கல்வியைத் தொடர […]