கறுப்புப் பட்டியலுக்கான ‘லூஸ் ஃபாஸ்டேக்’ குறித்து புகார் அளிக்கும் செயல்முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வலுப்படுத்துகிறது. இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுங்கச்சாவடி செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், ‘வாகனங்களில் ஒட்டப்படாமல் தனியாக கைவசம் வைத்துள்ள ஃபாஸ்டேக் வில்லைகள்’ குறித்து புகார் அளித்து, அவற்றைக் கறுப்புப் பட்டியலில் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் […]

மேற்கு சூடானின் வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள பகுதிகளில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதல்களில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர் சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது […]

காசாவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் கிட்டத்தட்ட 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 58,000 ஐத் தாண்டியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காசா நகர சந்தையில் நடந்த வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் உதவி விநியோக இடங்களில் பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்ததாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இஸ்ரேலிய […]

தமிழக அரசின் மகளிர் நலனுக்கான மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ள “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்திற்கான விரிவாக்க விண்ணப்ப பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தே பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த […]

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது நபர் இறந்ததைத் தொடர்ந்து, கேரளாவில் நிபா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வவ்வால்கள் மூலம் இந்த வகை வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ நோய் தொற்று ஏற்படும். […]

உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற நிலையில், நடிகர் விஜய் ஸ்டைலில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். […]

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் 2005 ஆம் ஆண்டு, தனது 15 வயதில் ஆசிய விளையாட்டு போட்டியை வென்றார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக்கில் அவரது சிறந்த செயல்திறன் ஆகும். சாய்னா தனது வாழ்க்கையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார், அவற்றில் 2 பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், ஒன்று கலப்பு இரட்டையர் பிரிவிலும் […]

நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை முதலில் சரிபார்க்க வேண்டும். தமிழகத்தில் வீட்டுக் கடன் பெற விரும்புவோருக்கு புதிய விதிமுறைகளை வங்கிகள் தற்போது அறிமுகம் செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சிறு நிதி வங்கிகள் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்க கூடுதல் ஆவணங்களையும், சில சரிபார்ப்பு முறைகளையும் தற்போது கட்டாயமாக்கியுள்ளன. […]