இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.. ரஷ்யாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திய்வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டது.. ரஷ்யாவின் கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலையில் 8.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் வெளியேறினர். ரஷ்யாவின் வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளில் பதிவான மோசமான […]

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரை பற்றி நாடாளுமன்ற உரையில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பேசவே இல்லை என்றும் இது மிகப் பெரிய அவமதிப்பு என்றும் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் மனைவி விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 அன்று, பஹல்காமில் உள்ள பைசரன் சமவெளிப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் 31 வயதான சுபம் திவேதியும் ஒருவர். அவர் […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.73,680 விற்பனை செய்யப்படுகிறது. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், […]

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்து 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ பிஎல் 2025 ஜெர்சிகள் திருடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 40 வயதுடைய பாதுகாப்புக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட காவலர் ஃபரூக் அஸ்லம் கான், 261 ஜெர்சிகளைத் திருடிச் சென்றதாகவும், ஒவ்வொன்றும் சுமார் […]

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 74 கி.மீ ஆழத்தில் இருந்தது மற்றும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு தென்கிழக்கே 133 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதியில் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் […]