நாட்டில் முதல் முறையாக மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனால், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு முன்கூட்டியே கிடைக்கும் என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் (RGI) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக RGI மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் X தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். […]

நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் எனவும், பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 […]

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டணியில் உள்ள நாடுகள் மீது விரைவில் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார். பின்னர் இந்த வரிவிதிப்பு முடிவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த அவகாசம் இன்றுடன் (ஜூலை 9) முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள […]

2008 முதல் 2017 வரை பிறந்த 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீனாவிற்குப் பிறகு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆசியாவிலும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் குவிந்திருக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் நிறுவனமான […]

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் நேபாளம்-சீனா எல்லை பாலம் அடித்து செல்லப்பட்டதில் இருநாடுகளை சேர்ந்தவர்களில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் கிராங்க் துறைமுகம் அருகே, கட்டுமானப் பணி நடந்தது. அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 17 பேர் […]

பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் 35 வயதைத் தாண்டும்போது, ​​ஓய்வு பெறுவதற்கான அழுத்தமும் அவர் மீது அதிகரிக்கத் தொடங்குகிறது. 40 வயதிற்குள், பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஓய்வு பெறுவதற்கு வயது இல்லை என்றாலும், ஒரு வீரர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம், ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக ஏதேனும் வயது வரம்பு உள்ளதா? 18 வயதுக்குட்பட்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்க முடியுமா? பதிலை இங்கே […]

டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்குப் பிறகு, பிரேசில் தனது மிக உயர்ந்த குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூலா முன்னிலையில் இந்தியாவும் பிரேசிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன. பிரேசிலின் அதிபர் லூலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘கிராண்ட் காலர் ஆஃப் தி […]

கூகுள் இந்தியாவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. கூகுள் இப்போது இந்தியாவில் அதன் தேடல் தளத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்முறையை (AI) தொடங்கியுள்ளது. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) சமூக ஊடக தளமான X இல் இதை அறிவித்தார். “ஆய்வகங்களில் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் தேடலில் AI பயன்முறையை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்துகிறோம். இது […]