ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகள் மீது 40% வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள டிரம்ப், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மியான்மர் மற்றும் லாவோஸ் மீது அதிகபட்சமாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் பற்றிய தகவல்களை டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் […]

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் […]

வேலைவாய்ப்பு குறித்து பொய்யான தகவல்களை அளித்து மக்களை ஏமாற்ற டி.என்.பி.எஸ்.சி துணை போகக்கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய […]

அமெரிக்காவின் டெக்சாஸைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதால், சேறு நிறைந்த ஆற்றங்கரைகளில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக […]

புறாக்களின் எச்சங்கள் மற்றும் இறகு கழிவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் காரணமாக, மும்பையில் உள்ள ‘கபூதர் கானாக்கள்’ (புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்கள்) உடனடியாக மூடுமாறு மகாராஷ்டிரா அரசு பிரஹன் மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 3ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பொது இடங்களில் தொடர்ந்து புறாக்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பல உறுப்பினர்கள் எச்சரித்தனர். இந்தப் பிரச்சினையை எழுப்பிய சிவசேனா தலைவரும் பரிந்துரைக்கப்பட்ட எம்.எல்.சி.யுமான மனிஷா கயாண்டே, இந்த […]

நாடு தழுவிய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் […]

“சமீபத்திய சமூக ஊடகப் பதிவில், டாக்டர் மாலூஃப், ஜெர்மனியில் உள்ள ஒரு இஸ்லாமிய இமாம் சொர்க்கம் குறித்துப் பேசும் வீடியோவை பகிர்ந்தார். அந்த இமாம், இஸ்லாமிய இறுதிக்கால கோட்பாட்டில் சொர்க்கத்தின் தன்மையைப் பற்றிய தனது கருத்துகளை விளக்குகிறார்.” அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. வீடியோவில் அந்த இமாம் பேசியதாவது, விசுவாசிகளுக்காக சொர்க்கத்தில் 72 கன்னிப்பெண்கள் காத்திருப்பார்கள் என்ற கருத்து விவாதத்தையும் சர்ச்சையையும் தூண்டியுள்ளது. இவ்வகை கருத்துகள், மதப்பண்பாடுகள், சமத்துவம், சமுதாய […]

அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இதனிடையே இச்சம்பவம் குறித்து […]

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். […]

சென்னையில், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெறவுடுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில், 4 நாட்கள் தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெறவுடுள்ளது. இந்த பயிற்சி வரும் 21.07.2025 முதல் 24.07.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் […]