பீகாரில் பில்லி, சூனியம் செய்ததாக சந்தேகத்தில் ஒரே குடும்பத்தினரைச் சேர்ந்த ஐந்து பேரை, கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்து, தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பூர்ணிமா என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்மமாக முறையில் மரணம் ஏற்பட்டது. இதற்கு காரணம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் அமானுஷ்ய சடங்குகள் வளர்ப்பதுதான் காரணம் என நம்பினர். இதனால் […]

அஜித்குமார் நகைகளை எடுத்ததை நான் கண்களால் பார்க்கவில்லை என்று நிகிதா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் நடந்து முடிந்துள்ளது.. […]

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ஆவணப்படம், Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.. இந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. அதில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் இது தொடர்பாக தனுஷின் வொண்டர்பார்ஸ் […]

அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 10 அரசு துறைகளின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் […]

பூமி இப்போது இயல்பை விட வேகமாகச் சுழன்று வருகிறது என்றும் இதனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 3 நாட்களில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும் விஞ்ஞானிகள் பதிவிட்டுள்ளனர்.. பூமி என்ற கோள் தனித்துவமானது. பூமியின் தன்னை சுழன்று சூரியனை சுற்றி வருவதால், இரவு பகல் மாறி வருகிறது.. பூமி தன்னை தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரம்.. அதாவது ஒரு நாள்.. அதே […]

ஜூலை 15, 2025 முதல், SBI கிரெடிட் கார்டுகள் தொடர்பான சில முக்கியமான விதிகள் மாறப்போகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. உங்களிடம் SBI கிரெடிட் கார்டு இருந்தால், உங்களுக்கு முக்கியமான அப்டேட் வந்துள்ளது.. ஜூலை 15, 2025 முதல், SBI கிரெடிட் கார்டுகள் தொடர்பான சில முக்கியமான விதிகள் மாறப்போகிறது.. இந்த மாற்றங்கள் உங்கள் பில்களை நீங்கள் செலுத்தும் விதத்தையும் நீங்கள் பெறும் சலுகைகளையும் பாதிக்கும். குறைந்தபட்ச கட்டண விதிகள் […]

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் சார்ந்த இந்து முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த மாநாடு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. […]

கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் நாளை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திருப்புவனத்தில் போராட்டம் நடத்த முதலில் அனுமதி கேட்டோம்.. அனுமதி கொடுத்துவிட்டனர்.. நாளை ஆர்ப்பாட்டம் என்று உறுதி செய்த பின்னர், நள்ளிரவில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதுவரை நடந்த எல்லா போராட்டத்திற்கும் நாங்கள் அனுமதி […]

உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையத்தில் பிரசவ வழியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண், ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். […]