swiggy, zomato போன்ற நிறுவனங்கள் கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் உணவு வழங்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நவீன வாழ்க்கை முறைமையில், வீடிலிருந்தபடியே உணவு வாங்கும் வசதியால் ஆன்லைன் டெலிவரி செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்துள்ளன. ஆனால் சமீப காலமாக ஆன்லைன் தளங்களில் உணவுகளின் ரேட் அதிகரித்து வருகிறது. மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன. அதே […]

சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மயானங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. எனினும் பல்வேறு […]

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் சாலை அடைப்புகள் மற்றும் மின்சாரம் துண்டிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா, மண்டி, சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்த இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் […]

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை முறைப்படுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வித் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் […]

வரவிருக்கும் S-5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்காக வடிவமைக்கப்பட்ட 8,000 கிமீ தூரம் மற்றும் MIRV திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையான K-6 ஹைப்பர்சோனிக் SLBM இன் கடல் சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது. DRDO ஆல் உருவாக்கப்பட்ட இது, இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு தன்னிறைவில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. இஸ்ரேல்-ஈரான் போரின் போது, ​​நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் டோமாஹாக் ஏவுகணை மற்றும் B-2 குண்டுவீச்சு விமானம் […]

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை ரூ.25,000 பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி தேர்வு மையத்துடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் […]

காசாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 85 பேர் பலியாகினர். காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் நேற்று கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன. காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா […]

தமிழகத்தில் அனுமதி அற்ற மனை பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள் இன்று முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, […]

போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித் உயிரிழப்பு” சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தகவல். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் […]